மீன்பிடி படகொன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவரைக் காணவில்லை
மட்டக்களப்பு - முகத்துவாரம் கடல் பகுதியில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் அதில் பயணித்த மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
மட்டக்களப்பு திரைய்மடு சுவீஸ் கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
எனினும், குறித்த மீனவர் பயணித்த படகு செட்டிபாளையம் கடலில் கரை ஒதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவரைத் தேடும் பணிகளில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.