பாடசாலை மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி!

பாடசாலை மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி!

பாடசாலை மாணவர் ஒருவர், தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவமொன்று பேராதனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவரின் பெற்றோரைப் பாடசாலைக்கு அழைத்து வருமாறு அதிபர் வழங்கிய உத்தரவுக்கு பயந்து மேற்படி, தற்கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

15 வயதுடைய குறித்த மாணவர், தற்போது பேராதனை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை காவல்துறையினர் தெரிவித்தனர்.