பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டன

பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டன

அதிகளவான மழைவீழ்ச்சி காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகளும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக கலா ஓயா மற்றும் லுணு ஓயாவைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.