மின்சார சபை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்

மின்சார சபை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்

கெரவலப்பிட்டிய மின் நிலையத்தினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிராக யாழ்ப்பாண மின்சார சபை தலைமையகத்துக்கு முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு கையெழுத்து போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் 40 வீத பங்கினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியினரின் ஏற்பாட்டில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையின் அனைத்து இடங்களிலும் இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகங்களுக்கு முன்றலில் இன்று மதியம் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணம் பழைய பூங்காவி வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் தலைமை காரிய முன்றலில் இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் அமெரிக்காவிற்கு கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் ஒரு பகுதி விற்பனை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து போராட்டம் இடம்பெற்றதோடு, கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
 

-யாழ். நிருபர் பிரதீபன்-