வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய நபர் கைது!
வெலிகடை சிறைச்சாலையை அண்மித்த பேஸ்லைன் வீதி நடை மேடையில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நபரொருவரை சிறைச்சாலை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
அதன்பின்னர், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, சிறைக்கைதியொருவருக்கு போதைப்பொருள் வழங்கும் நோக்கில் குறித்த நபர் அவ்விடத்தில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
எனினும், அவரிடம் போதைப்பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லை என்றும், கைப்பேசியொன்று மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொரளை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.