ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க ஒன்றியம், கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை
ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்க ஒன்றியம், கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தனவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆசிரியர் - அதிபர் வேதன பிரச்சினை தொடர்பான அமைச்சரவை உப குழுவின் அறிக்கை தொடர்பில் அவதானிப்புக்களை முன்வைப்பதற்கு முன்னதாக, கல்வி அமைச்சு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் இந்தத் தீரமானத்தை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய, இன்று அல்லது நாளை கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.