மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிப்பிரிவு தற்காலிகமாக மூடல்!

மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிப்பிரிவு தற்காலிகமாக மூடல்!

இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிப்பிரிவில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த பிரிவு எதிர்வரும் 20ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

எனினும், குறித்த பிரிவின் சேவைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள 011-2206690 என்ற இலக்கத்திற்கு அழைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.