அமெரிகாவில் உள்ள டைட்டான் ஏவுகணைத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு 53 பேர் பலியான நாள்: 9-8-1965

அமெரிகாவில் உள்ள டைட்டான் ஏவுகணைத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு 53 பேர் பலியான நாள்: 9-8-1965

அமெரிக்காவின் ஆர்கன்சசில் உள்ள டைட்டான் ஏவுகணைத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 53 பேர் பலியானார்கள். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1892 - தமஸ் அல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார். * 1902 - ஏழாம் எட்வேர்ட் ஐக்கிய பிரிட்டனின் மன்னனாக முடிசூடினார். * 1902 - யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் ரோமன் கத்தோலிக்க ஆலயம் ஒன்றும் பாடசாலை ஒன்றும் இந்துக்களால் தாக்கி அழிக்கப்பட்டன.

அமெரிகாவில் உள்ள டைட்டான் ஏவுகணைத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு 53 பேர் பலியான நாள்: 9-8-1965

அமெரிக்காவின் ஆர்கன்சசில் உள்ள டைட்டான் ஏவுகணைத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 53 பேர் பலியானார்கள்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1892 - தமஸ் அல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்.

* 1902 - ஏழாம் எட்வேர்ட் ஐக்கிய பிரிட்டனின் மன்னனாக முடிசூடினார்.

* 1902 - யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் ரோமன் கத்தோலிக்க ஆலயம் ஒன்றும் பாடசாலை ஒன்றும் இந்துக்களால் தாக்கி அழிக்கப்பட்டன.

* 1907 - இங்கிலாந்தில் பிரௌன்சி தீவில் ஆகஸ்ட் 1-ல் ஆரம்பிக்கப்பட்ட சாரணிய இயக்கத்தின் முதல் பாசறை முடிவடைந்தது.

* 1942 - வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் துவக்கியதற்காக மகாத்மா காந்தி உட்பட பல இந்திய காங்கிரஸ் தலைவர்கள் பம்பாயில் கைது செய்யப்பட்டார்

* 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நகரான நாகசாகியின் மீது ஐக்கிய அமெரிக்கா வீசிய 2-வது அணுகுண்டு எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டு 70,000 முதல் 90,000 வரையான பொதுமக்களை அதே இடத்தில் கொன்றது.

* 1965 - சிங்கப்பூர் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனி நாடாகியது.

* 1965 - ஆர்கன்சசில் டைட்டான் ஏவுகணைத் தளத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 53 பலியானார்கள்.

* 1974 - வாட்டர்கேட் ஊழல்: அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் பதவி விலகினார்.

* 1991 - யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் ஜூலை 10-ல் ஆரம்பித்த ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இச்சமரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். எனினும் 2000-ம் ஆண்டில் மீளத் தாக்குதல் மேற்கொண்டு தளத்தைக் கைப்பற்றினர்.

* 2006 - திருகோணமலைப் பகுதியில் தமிழ் மக்கள் வெருகல் ஊடாக இடம் பெயர்ந்தபோது விமானத் தாக்குதலுக்குள்ளாகியும் எறிகணைத் தாக்குதலாலும் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்:-

* 1776 - அமேடியோ அவகாதரோ, இத்தாலிய வேதியியலாளர் * 1974 - மகேஷ் பாபு, தெலுங்கு திரைப்பட நடிகர்

இறப்புகள்:-

* 1962 - ஹேர்மன் ஹெசே, நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய எழுத்தாளர் (பி. 1877)

* 1969 - செசில் பிராங்க் பவெல், நோபல் பரிசு பெற்ற பிரிட்டன் இயற்பியலாளர் (பி. 1903)

* 1975 - திமீத்ரி சொஸ்தகோவிச், ரஷிய இசையமைப்பாளர் (பி. 1906)

* 2000 - ஜோன் ஹர்சானி, நோபல் பரிசு பெற்ற ஹங்கேரிய பொருளியலாளர் (பி. 1920)