
நேற்றைய தினம் 116,664 பேருக்கு எஸ்ட்ரா செனகா தடுப்பூசி
நேற்றைய தினம் நாட்டில் 116,664 பேருக்கு எஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதுவரை 756,646 பேருக்கு எஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் 170,000 பேர் தங்களுடைய இரண்டாவது டோஸை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் நாட்டில் 144,766 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 9,220 பேருக்கும் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இதுவரை 159,081 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் 14,503 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
அதேபோல், இதுவரை 201,507 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில், 717,736 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.