கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட 3 பேர் பலி!
மீகொடை - வடரெக்க சந்தியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கரவண்டி ஒன்று லொறி ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் 4 மாத கைக்குழந்தை ஒன்றும் அடங்குவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.