சுவர்ணமஹால் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களுக்கு பிணை!

சுவர்ணமஹால் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களுக்கு பிணை!

சுவர்ணமஹால் தனியார் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் நாலக எதிரிசிங்க ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் குற்றப்பத்திரம் வழங்கப்பட்டு அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் நால்வரும் பணச்சலவை குற்றச்சாட்டின்கீழ் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.