மவுசாகலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் ஆகஸ்ட் 14 வரை திறக்கப்படுகிறது!

மவுசாகலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் ஆகஸ்ட் 14 வரை திறக்கப்படுகிறது!

திருத்தப்பணிகள் காரணமாக மவுசாகலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில், இடைக்கிடையில் திறக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் கெசல்கமுவ ஓய மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வதற்கான சாத்தியங்கள் உள்ளன.

எனவே குறித்த கங்கைகளை அண்டி தாழ்நில பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.