36 நாட்களுக்கு பின்னர் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றம்!

36 நாட்களுக்கு பின்னர் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றம்!

36 நாட்களுக்குப் பின்னர் இலங்கையில் மீண்டும் ஒரேநாளில் 2000க்கும் அதிகமானோர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

நேற்று மாத்திரம் 2329 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

அவர்களில் 41 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.

இதன்படி மொத்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 341,202ஆக உயர்ந்துள்ளது.

இதன்படி 26, 448 பேர் கொவிட் தொற்றுக்காக சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.