வர்த்தக நிலையத்துக்குள் நிர்வாணமாக நுழைந்து பொருட்களை திருடிய நபர்! (காணொளி)
ருணாகல், உஹுமிய பிரதேசத்தில், மூடப்பட்டிருந்த சில்லறை விற்பனை நிலையமொன்றுக்குள் நிர்வாணமாக நுழைந்த நபரொருவர் பொருட்கள் சிலவற்றை திருடிச்செல்லும் காட்சி அங்கிருந்த சிசிரீவி கெமராவில் பதிவாகியுள்ளது.
நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் குறித்த வர்த்தக நிலைய உரிமையாளரிடம் நாம் வினவியபோது, சுமார் 75 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் இதன்போது திருடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் வீரம்புகெதர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
திருட்டுச் சம்பவத்தின்போது பதிவான காணொளி வருமாறு: