வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்களை கண்டறிய திட்டம்

வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்களை கண்டறிய திட்டம்

மேல் மாகாணத்தில் உள்ள வீடுகளில் வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்களை கண்டறிவதற்கான விசேட வேலை திட்டம் ஒன்று இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

வீடுகளில் வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளவர்களின் வயதெல்லையின் அடிப்படையில் குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.