ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்!

ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்!

பணிப்பெண்ணாக பணியாற்றிய 16 வயது சிறுமி மரணித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை பணிக்கமர்த்திய தரகர் ஆகியோரும் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அத்துடன், வேறொரு பணிப்பெண்ணை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான ரிஷாட் பதியுதீனின் மைத்துனரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், சந்தேகநபர்கள் நால்வரையும் எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.