கல்முனையில் வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

கல்முனையில் வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

அம்பாறை - கல்முனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் அதேப்பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில், கல்முனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.