நேற்று 4 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

நேற்று 4 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாளொன்றில் அதிக எண்ணிக்கையிலான கொவிட் தடுப்பூசிகள் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் 412,111 கொவிட் தடுப்பூசிகள் நாடளாவிய ரீதியில் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இதன்போது, 3 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதற்கமைய மூன்று இலட்சத்து 66 ஆயிரத்து 622 பேருக்கு இவ்வாறு சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.