
நாட்டில் நேற்றைய தினம் 1,737 பேருக்கு கொவிட் தொற்று!
நாட்டில் நேற்றைய நாளில் 1,737 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
அவர்களில் 1,707 பேர் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 30 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.
அதனடிப்படையில் இதுவரையிலான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 294,850 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 957 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 266,665 ஆக உயர்வடைந்துள்ளது.