கொரோனா வைரஸ் தோற்றம் பெற்ற விதத்தை கண்டறிய அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

கொரோனா வைரஸ் தோற்றம் பெற்ற விதத்தை கண்டறிய அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

கொரோனா வைரஸ் தோற்றம் பெற்ற விதத்தை கண்டறிய அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) அழைப்பு விடுத்துள்ளது.

சீனாவில் தொடர்ந்தும் ஆய்வு கூடங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை பரிசோதிப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அண்மையில் சீனாவிடம் அனுமதி கோரியிருந்தது. எனினும் அந்த கோரிக்கையை சீனா நிராகித்திருந்தது.

எனினும், இது சீனா மீது முன்வைக்கப்படும் அரசியல் ரீதியான குற்றச்சாட்டு அல்ல என ஜெனிவாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

இது குறித்து அனைத்து நாடுகளும் ஒத்துழைப்புடனும் புரிந்துணர்வுடனும் செயற்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.