கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,310 பேர் அடையாளம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,310 பேர் அடையாளம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,310 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 292,608 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 953 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 265,708 ஆக அதிகரித்துள்ளது.