
நாட்டில் நேற்றைய தினம் 1,721 பேருக்கு கொவிட் தொற்று!
நாட்டில் நேற்றைய தினம் 1,721 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
அவர்களில் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடைய 1,714 பேரும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 7 பேரும் உள்ளடங்குகின்றனர்.
இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 291,298 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேநேரம், நாட்டில் கொவிட்19 தொற்றிலிருந்து இதுவரையில், 264,755 பேர் குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் மேலும் 42 பேர் கொவிட் தொற்றால் உயிரழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று முன்தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்று மாலை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 ஆண்களும், 17 பெண்களுமே இவ்வாறு கொவிட் தொற்றினால் உயிரிழநதுள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை, 3,959 ஆக உயர்வடைந்துள்ளது.