பெற்ற பிள்ளைகளை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்! பதறவைக்கும் உண்மை சம்பவம்

பெற்ற பிள்ளைகளை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்! பதறவைக்கும் உண்மை சம்பவம்

சென்னையில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான கணவனால் பிள்ளைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

சென்னை, ஆவடியை அடுத்த திருநின்றவூர் நடுக்குத்தகை திலீபன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி கவுரி.

இவர்களுக்கு 3 வயதில் தீக்‌ஷிதா என்ற மகளும், ஒன்றரை வயதில் அஸ்வின் என்ற மகனும் உள்ளனர். 

பெயிண்டராக வேலை பார்க்கும் ரமேஷ், குடிபோதைக்கு அடிமையானார், ஊரடங்கு காலம் என்பதால் வேலையில்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கவுரியிடம் சண்டையிட்டுள்ளார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார் கவுரி. இந்நிலையில் சம்பவதினத்தன்றும் இருவருக்கும் சண்டை நடந்துள்ளது, ரமேஷ் வெளியிலும் சென்றுவிட்டார்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த கவுரி, தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.

இதன்படி வீட்டை பூட்டிவிட்டு, வீட்டின் மேற்கூரையில் இரும்பு குழாயில் தனித்தனி புடவையில் தூக்கு கயிறு கட்டியுள்ளார்.

அதில் தனது மூன்று வயது மகள் தீக்ஷிதா மற்றும் ஒன்றரை வயது மகன் அஸ்வின் இருவரையும் தானே தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துள்ளார்.

பின்னர், வேதனை தாங்க முடியாமல் அருகில் இன்னொரு புடவையில் தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் நீண்டநேரம் ஆகியும் கவுரி, கதவை திறக்காததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர்.

குழந்தைகளுடன் கவுரி தூக்கில் தொங்குவதை பார்த்ததும் உடனடியாக போலீசுக்கு தகலவல் அளித்துள்ளனர்.

விரைந்து வந்த திருநின்றவூர் போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் விசாரணையை தொடங்கியுள்ளனர்.