மதுபோதையில் 6 வயது மகனை தாக்கிய தந்தை கைது!

மதுபோதையில் 6 வயது மகனை தாக்கிய தந்தை கைது!

மதுபோதையில் தனது 6 வயது மகனை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிய தந்தை ஒருவர் புத்தல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக சந்தேக நபர் மதுபோதையில் வந்து அவரது மகனை தாக்குவதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமையவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் புத்தல -  உடுகம பகுதியை சேர்ந்தவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.