மருதானை தொடருந்து நிலையத்தில் பயணச்சீட்டு விநியோகம் இடைநிறுத்தம்!

மருதானை தொடருந்து நிலையத்தில் பயணச்சீட்டு விநியோகம் இடைநிறுத்தம்!

கொழும்பு – மருதானை தொடருந்து நிலையத்தில் பயணச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பயணச்சீட்டு விநியோகிக்கும் அதிகாரிக்கு கொவிட்19 தொற்று உறுதியானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், மருதானை தொடருந்து நிலையத்திலிருந்து பயணச்சீட்டின்றி பயணிக்கும் பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் தமது பயணங்களை முன்னெடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.