சினோவெக் தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த அனுமதி!
இலங்கையில் அவசர பயன்பாட்டுக்காக சினோவெக் கொவிட் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இலங்கையினுள் தற்போது, அஸ்ட்ராசெனெகா, சைனோபாம், ஸ்புட்னிக் வீ , பைஸர் மற்றும் மொடர்னா ஆகிய தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆறாவது தடுப்பூசியாக சீனாவின் சினோவெக் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மொடர்னா தடுப்பூசி இன்றைய தினமே நாட்டுக்கு முதல் முறையாக கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், இலங்கையில் தற்போது, 4 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.