தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 190 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 190 பேர் கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 190 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 50,027 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் சுமார் 43,000 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எஞ்சிய சுமார் 7,000 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டில், குற்றவாளியாகும் நபர் ஒருவருக்கு, 10,000 ரூபா அபராதமும், 6 மாத சிறைத் தண்டனையும் நீதிமன்றினால் விதிக்க முடியும் என காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.