நாட்டில் நேற்று 1,507 பேருக்கு கொவிட் தொற்று!

நாட்டில் நேற்று 1,507 பேருக்கு கொவிட் தொற்று!

நாட்டில் நேற்று 1,507 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்களில், 1,492 பேர் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ள நிலையில், 15 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் மொத்த கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை 274,538ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை 244,437 பேர் குணமடைந்துள்ளதுடன் 26,634 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.