நாட்டில் மேலும் 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

நாட்டில் மேலும் 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்த மேலும் 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் இதுவரை அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் மொத்தம் 252 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2350 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 1979 பேர் குணமடைந்துள்ளதோடு 360 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.