கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,996 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 201,389ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.