இன்றும் மழையுடனான வானிலை!

இன்றும் மழையுடனான வானிலை!

நாட்டின் சிலப் பகுதிகளில் இன்றைய தினமும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அதேவேளை ஏனைய பகுதிகளில் சாதாரண வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மத்திய, வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் மேற்கு சரிவுகளிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்று (30-40) கிலோமீற்றர் வேகத்தில் வலுவாக இருக்கும் என தெரிவித்துள்ளது.