பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவில்லை
பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவில்லை என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நேற்று (14) இரவு ஔிபரப்பரப்பான அத தெரண 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த வாகன இறக்குமதி தொடர்பான பிரேரணையை தற்காலிகமாக இரத்து செய்ய அரசு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் எந்தவொரு வாகனமும் இறக்குமத செய்ய நடவடிக்கை எடுக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.