கொவிட் மரணங்களை அறிக்கையிடும் முறைமையில் மாற்றம்!

கொவிட் மரணங்களை அறிக்கையிடும் முறைமையில் மாற்றம்!

இனிவரும் காலங்களில், கொவிட் தொற்றால் ஏற்படும் மரணங்களை 48 அல்லது 24 மணித்தியாலங்களுக்குள் இடம்பெறும் அனைத்து கொவிட் மரணங்களை அன்றைய தினத்திலேயே உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். 

அதற்கமைய, இதுவரை காலங்களில் கொவிட் மரணங்களை உறுதிப்படுத்தும்போது, முன்பு போல, முந்தைய நாட்களில் ஏற்பட்ட மரணங்கள் காலம் தாழ்த்தி உறுதிப்படுத்தப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.