பயிர்ச் செய்கைக்கான இரசாயன பொருட்களை இறக்குமதி செய்ய தீர்மானம்

பயிர்ச் செய்கைக்கான இரசாயன பொருட்களை இறக்குமதி செய்ய தீர்மானம்

விவசாய பயிர்ச் செய்கைகளில் ஏற்படும் பாதிப்புக்களை தடுப்பதற்காக சில விவசாய இரசாயன பொருட்களை இறக்குமதி செய்து, கட்டுப்பாட்டின் கீழ் விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சர் ரமேஸ் பத்திரன இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நாட்டுக்கு தேவையான சேதன பசளையை போதுமானளவு நாட்டினுள் உற்பத்தி செய்ய முடியாவிடின் அதனை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.