பறவைகளுக்கான மருந்து பொருட்களுடன் நபர் ஒருவர் கைது

பறவைகளுக்கான மருந்து பொருட்களுடன் நபர் ஒருவர் கைது

குவைட்டில் இருந்து இலங்கை கொண்டு வரப்பட்ட ஒரு தொகை பறவைகளுக்கான மருந்து பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிருக வைத்திய அதிகார சபையின் அனுமதியின் குறித்த மருந்து பொருட்கனை விற்பனை செய்தமை தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 10 இலட்சம் பெறுமதியான மருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.