எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளன.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95  ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 23 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

லங்கா ஐஓசி எரிபொருட்களின் விலைகளும் மேற்கண்டவாறு அதிகரிக்கப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய எரிபொருட்களின் புதிய விலைகள் வருமாறு:


ஒக்டேன் 92 ரக பெட்ரோல் - 157 ரூபா 

ஒக்டேன் 95  ரக பெட்ரோல் - 184 ரூபா 

ஒட்டோ டீசல் - 111 ரூபா 

சுப்பர் டீசல் - 144 ரூபா 

மண்ணெண்ணெய் - 77 ரூபா