நேற்றைய தினம் 2,738 பேருக்கு கொவிட்-19 தொற்று
நாட்டில் நேற்றைய தினம் 2,738 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
அவர்களில் 23 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 216,134 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் 182,238 பேர் குணமடைந்துள்ளனர்.
அதேவேளை தொற்று உறுதியான 31,986 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.