சமையல் எரிவாயு கொள்கலன் தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு!

சமையல் எரிவாயு கொள்கலன் தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு!

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலனை நாடுமுழுவதும் விற்பனைக்காக வைக்க வேண்டும் என உற்பத்தியாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சமையல் எரிவாயு கொள்கலனை விற்பனை செய்வது மற்றும் கொள்வனவு செய்ய மறுப்பதை தவிர்க்கும் வகையிலும் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.