இன்றும் 2000க்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தொற்று!

இன்றும் 2000க்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தொற்று!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,173 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 212,834 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றிலிருந்து மேலும் 2,168 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 180,427ஆக அதிகரித்தது.
அத்துடன், நாட்டில் இதுவரையில் 1,844 கொரோனா  மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.