சீரற்ற வானிலை காரணமாக மரணித்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மரணித்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.
172,132 பேர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
747 குடும்பங்களைச் சேர்ந்த 2,905 பேர் பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
1,442 குடும்பங்களைச் சேர்ந்த, 5,084 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.