
கர்ப்பிணி தாய்மார்களுக்கு சைனோபாம் தடுப்பூசி
கர்ப்பிணி தாய்மார்களுக்காக சைனோபாம் தடுப்பூசியினை செலுத்த பரிந்துரை செய்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
அதற்கமைய, கர்ப்பிணி தாய்மார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் கொழும்பு பிலியந்தலையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.