நடமாட்டக் கட்டுப்பாடுகளை மீறும் வாகன சாரதிகள் தனிமைப்படுத்தபடுவர்!

நடமாட்டக் கட்டுப்பாடுகளை மீறும் வாகன சாரதிகள் தனிமைப்படுத்தபடுவர்!

நடமாட்டக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி வாகனங்களை செலுத்துபவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் அவர்களை தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கான அறிவுறுத்தல் சகல காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.