11 மாவட்டங்களைச் சேர்ந்த 77 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு

11 மாவட்டங்களைச் சேர்ந்த 77 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, நுவரெலியா உள்ளிட்ட 11 மாவட்டங்களின் 77 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருகோணமலையின் பூம்புகார், முருகன் கோவிலடி, யாழ்ப்பாணத்தின் பலாலி வடக்கு, முல்லைத்தீவின் தேவிபுரம், புதுக்குடியிருப்பு மேற்கு, புதுக்குடியிருப்பு கிழக்கு, மந்துவில், மல்லிகைத்தீவு, கோம்பாவில், உடையார்கட்டு வடக்கு, உடையார்கட்டு தெற்கு, வல்லிப்புனம், முள்ளியவளை மேற்கு முள்ளியவளை வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலமீன்மடு, சின்னஊரணி, திருச்செந்தூர், கல்லடி, கல்மடு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், நுவரெலியாவின் மொரஹெனாகம மற்றும் மில்லகஹமுல்ல கிராம சேவகர் பிரிவுகளும், கொழும்பின் கொலமுல்ல மற்றும் மம்பே மேற்கு கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தின் பல்லேகம, மொரவத்த, உடகம, யோதகம, புதிய நகரம், வலகொட, சுதுகல, பனாமுர, நுகவல மேற்கு, உடுஹவுப்பே, நுகவல கிழக்கு, மடலகம, கட்டங்கே 3ம் இலக்க பிரிவு, பனாபிட்டிய தெற்கு, பனாபிட்டிய வடக்கு, கப்பெல்ல, மியனவிட மேற்கு, பொத்துபிட்டிய தெற்கு மற்றும் வடக்கு, இலுபகந்த, பனாபொல, தண்டகமுவ, வதுராவ, ஹப்புகொட, டென்வக, பத்தகட, டிப்பிடிகல, சன்னஸ்ஸகம, டொபகஸ்வின்ன, கொடகம ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டன.
கம்பஹா மாவட்டத்தில் எலபிட்டவல நவம் மஹர கிராம சேவகர் பிரிவும், ஹேக்கித்த கிராம சேவகர் பிரிவின் அத்கம் வீட்டுத்திட்டம், அல்விஸ் பிரதேசம், தேசிய வீட்டுத்திட்டம், கொக்டென் வீதி ஆகிய இடங்கள் தவிர்ந்த பகுதிகளும், குருந்துகஹாஹென, சேதுவத்தை, பரணவத்தை, நில்சிறி கமவின் 3ம் 7ம் ஒழுங்கைகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.

மாத்தளை மாவட்டத்தின் வல்பொல மற்றும் யட்டவத்த கிராம சேவகர் பிரிவின் அலவத்த கிராமமும் விடுவிக்கப்பட்டன.

களுத்துறையின் கித்துல்கொட தெற்கு கிராம சேவகர் பிரிவின் வெடிகந்த கிராமம் விடுவிக்கப்பட்டது.

காலி மாவட்டத்தின் வலம்பகல, கரனுங்கொட, கோவியப்பன, கஹாவன்னகம, டொம்மன்கொட, மீகாகொட, மெலியகொட, பியதிகம, கொக்கல 1 மற்றும் 2, லுணுமோதர, பொனவிஸ்டா, கட்டுகுருந்த, திக்கும்புர, அத்தனிகித ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டன.