சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு : மூவரை காணவில்லை
சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை 3 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 67,564 குடும்பங்களைச் சேர்ந்த 270,912 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.