சீரற்ற வானிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்வடைந்துள்ளது!

சீரற்ற வானிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்வடைந்துள்ளது!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், 05 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இதுவரையில் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களை சேர்ந்த 183,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.