நடமாட்ட கட்டுப்பாட்டு காலத்தில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் தனிமைப்படுத்தலில்!

நடமாட்ட கட்டுப்பாட்டு காலத்தில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் தனிமைப்படுத்தலில்!

நடமாட்ட கட்டுப்பாடுகள் அமுலாகியுள்ள காலப்பகுதியில் யாழ்ப்பாணம் - ஐந்து சந்திப்பகுதியில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண காவல்துறையினரும் பொது சுகாதார பரிசோதகர்களும் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிலர் பள்ளிவாசல்களிலும், ஏனையவர்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.