கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் கொவிட் தடுப்பூசி வழங்க தீர்மானம்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் கொவிட் தடுப்பூசி வழங்க தீர்மானம்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் கொவிட் தடுப்பூசியை வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் தடுப்பூசிகள் தொடர்பான வழிநடத்தல் குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.

மேலும், தடுப்பூசி வழங்கும் போது அனர்த்தம கூடிய பிரதேசங்களிலுள்ள தாய்மார்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று விசேட வைத்தியர் சித்ரமாலா த சில்வா, நேற்று (02) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்தார்.

இதேவேளை, மேலும் 12 மாவட்டங்களில் அவதானம் கூடிய பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு இம் மாதம் 8 ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்கவுள்ளதாகவும் கொவிட்-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)