ஆமையின் மரணத்துக்கான காரணத்தை கண்டறியுமாறு நீதிமன்றம் உத்தரவு!

ஆமையின் மரணத்துக்கான காரணத்தை கண்டறியுமாறு நீதிமன்றம் உத்தரவு!

உனவட்டுன கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய ஆமையின் மரணத்திற்கு, தீப்பற்றிய எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலிலிருந்து வெளியேறிய இரசாயன திரவியங்கள் காரணமா? என்பது குறித்து பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு, காலி மேலதிக நீதவான் சஞ்ஜீவ பத்திரண உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய, உயிரிழந்த ஆமையின் உடலை, அத்திட்டிய வனஜீவராசிகள் காவல்நடை மருந்துவ  அலுவலகத்திற்கும் அனுப்புமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஹிக்கடுவ வனஜீவராசிகள் காரியாலயத்தினால், முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை இன்று ஆராய்ந்தபோது, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.