மட்டக்களப்பில் சிறைக்கூடத்தினுள் உயிரிழந்த இளைஞர்!

மட்டக்களப்பில் சிறைக்கூடத்தினுள் உயிரிழந்த இளைஞர்!

மட்டக்களப்பு காவல்துறையினரால் நேற்று (02) இரவு கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் காவல்நிலையத்தின் சிறைக்கூடத்தினுள் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு கால்துறையினர் தெரிவித்தனர்.

22 வயதான குறித்த நபர் மட்டக்களப்பு களுவன்கேணி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் அதிகளவில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என மட்டக்களப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மட்டக்களப்பு வைத்தியசாலையில் இன்று (03) நடைபெற்றது.