மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!
மீள் அறிவித்தல் வரை கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்தொழில் திணைக்களம் மீனவர்களை கோரியுள்ளது.
பாணந்துறையிலிருந்து கொழும்பு ஊடாக நீர்கொழும்பு, கொச்சிக்கடை வரையான கடற்பகுதிகளில் இவ்வாறு மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தற்போது கடலில் மூழ்கிவருவதால், அதிலிருந்து எண்ணெய் கசிவுகள் வெளியாகும் அச்சம் காணப்படுவதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.